கோவை : வால்பாறையிலுள்ள பி.எஸ்.என்.எல் தொடர்பகத்தில் இரண்டு ஜெனரேட்டர்கள் இருந்தும் டீசல் இல்லாததால் மின்தடை காலத்தில் தொலைபேசி நிலையம் முற்றிலும் முடங்கி விடுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை : வால்பாறையிலுள்ள பி.எஸ்.என்.எல் தொடர்பகத்தில் இரண்டு ஜெனரேட்டர்கள் இருந்தும் டீசல் இல்லாததால் மின்தடை காலத்தில் தொலைபேசி நிலையம் முற்றிலும் முடங்கி விடுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் பி,எஸ்.என்.எல் நிறுவனம் மூலமாக இணையதள சேவைகள் வங்கிகள் இ.சேவை மையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடை காரணமாக பி.எஸ்.என்.எல் மூலம் வழங்கப்படும் மொபைல் சேவை, தரைவழி போன் சேவை மற்றும் இணையதள சேவைகள் பாதிக்கப்படுகின்றன.
வால்பாறையிலுள்ள பி.எஸ்.என்.எல் தொடர்பகத்தில் இரண்டு ஜெனரேட்டர்கள் இருந்தும் டீசல் இல்லாததால் மின் தடை காலத்தில் தொலைபேசி நிலையம் முற்றிலும் முடங்கி விடுகிறது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் இயங்கும் வங்கிகள், ஏ.டி.எம் மையங்கள், அரசு மற்றும் தனியார் இ.சேவை மையங்கள் முற்றிலும் பாதிப்படைகின்றன. இதன் காரணமாகத் தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை வங்கியிலிருந்து எடுக்க இயலாமல் தவித்து வருகின்றனர்.

மேலும், மக்கள் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ். உட்பட பல்வேறு சான்றிதழ்கள் பெற முடியாமல் அலைந்து வருகின்றனர். இந்நிலையை மின் தடை காலத்திலும் தொலைபேசி நிலையம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் பி,எஸ்.என்.எல் நிறுவனம் மூலமாக இணையதள சேவைகள் வங்கிகள் இ.சேவை மையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடை காரணமாக பி.எஸ்.என்.எல் மூலம் வழங்கப்படும் மொபைல் சேவை, தரைவழி போன் சேவை மற்றும் இணையதள சேவைகள் பாதிக்கப்படுகின்றன.
வால்பாறையிலுள்ள பி.எஸ்.என்.எல் தொடர்பகத்தில் இரண்டு ஜெனரேட்டர்கள் இருந்தும் டீசல் இல்லாததால் மின் தடை காலத்தில் தொலைபேசி நிலையம் முற்றிலும் முடங்கி விடுகிறது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் இயங்கும் வங்கிகள், ஏ.டி.எம் மையங்கள், அரசு மற்றும் தனியார் இ.சேவை மையங்கள் முற்றிலும் பாதிப்படைகின்றன. இதன் காரணமாகத் தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை வங்கியிலிருந்து எடுக்க இயலாமல் தவித்து வருகின்றனர்.

மேலும், மக்கள் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ். உட்பட பல்வேறு சான்றிதழ்கள் பெற முடியாமல் அலைந்து வருகின்றனர். இந்நிலையை மின் தடை காலத்திலும் தொலைபேசி நிலையம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.