கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் காரின் மீது அதிவேகமாக மோதி விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் சேரன் நகர் பகுதியில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து காரின் பின் பின்பகுதியில் வேகமாக மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.


கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் சேரன் நகர் பகுதியில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து காரின் பின் பின்பகுதியில் வேகமாக மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

மேட்டுப்பாளையம் சாலையில் எப்போதும் தனியார் பேருந்துகள் வேகமாக செல்வதும், விபத்துக்கள் ஏற்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. வேலை நாட்களில் எப்போதும் கூட்டமாக காணப்படும் இந்த சாலையில், இன்று காலை மேட்டுப்பாளையம் - கோவை செல்லும் தனியார் பேருந்து ஒன்று சேரன் நகர் அருகே முன்னே வலது பக்கம் செல்வதற்காக நின்று கொண்டிருந்த காரின் மீது வேகமாக மோதியது.

இதில் உயிர் விபத்து இல்லையென்றாலும் காரின் பயணித்த கணவர், மனைவி இருவரும் இறங்கி வந்து பேருந்து ஓட்டுனரை விபத்துக்கான காரணம் கேட்டதற்குப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நான்கு நடத்துனர் வேகமாக பேருந்தின் கீழே இறங்கி வந்து கணவர் மற்றும் மனைவியிடம் திமிராக பதில் கூறினர். பேருந்து வேகமாக வந்த போது பிரேக் கருவி கட்டுப்பாட்டை இழந்ததாகவும் அதனால் பேருந்து நிற்காமல் காரின் மீது மோதியதாகவும் ஓட்டுநர் மற்றும் நான்கு நடத்துனர் திமிராக தெரிவித்தனர்.

இதில் ஒரு பேருந்தில் ஒன்று மட்டும் இரண்டு நடத்துனர் இருப்பதற்கு பதில் 4 பேர் இருப்பது வாகன சட்டத்திற்கு புறம்பாக உள்ளது. பிரேக் கருவி நிற்காததற்கு முக்கியம் காரணம் பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றி வந்ததும், அதிவேகமாக வந்ததும் இவ்விபத்துக் காரணம் என்றே கூறலாம். மேலும், தொடர்ந்து தனியார் பேருந்துகள் மீதான குற்றம் அதிகரித்து வருவதும் அரசு கண்டு காணாமல் இருப்பதும் வேதனை அளிப்பதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...