திருப்பூர் : திருப்பூரில் உயர் மின்னழுத்த கோபுரத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்
திருப்பூர் : திருப்பூரில் உயர் மின்னழுத்த கோபுரத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்
திருப்பூர் குண்டடம் தாராபுரம் பகுதியில் விவசாய நிலங்கள் வழியே உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்படுவதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தாராபுரம் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்த விவசாயிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெறக் கோரியும், வழக்கு தொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
திருப்பூர் குண்டடம் தாராபுரம் பகுதியில் விவசாய நிலங்கள் வழியே உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்படுவதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தாராபுரம் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்த விவசாயிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெறக் கோரியும், வழக்கு தொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.