நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் குறைந்த பட்ச தினக் கூலி வழங்க கோரி கூட்டுறவு தேயிலை தொழிலாளர்கள் இன்கோ சர்வ் தலைமை அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் குறைந்த பட்ச தினக் கூலி வழங்க கோரி கூட்டுறவு தேயிலை தொழிலாளர்கள் இன்கோ சர்வ் தலைமை அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் குறைந்த பட்ச தினக்கூலியாக ரூ.600 வழங்கிட வேண்டும், அனைத்து தொழிற்சாலைகளிலும் உடனடியாக ஒரே மாதிரியான போனஸ் வழங்கிட வேண்டும், தொழிற்சாலையில் பெண்களை இரவு நேரப் பணிக்கு கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும், ஒவ்வொரு தொழிற்சாலையிலும் பெண்கள் பாதுகாப்பு கருதி புகார் பெட்டி உடனடியாக அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்கோ சர்வ் தலைமை அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த முற்றுகையிட்டு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் குறைந்த பட்ச தினக்கூலியாக ரூ.600 வழங்கிட வேண்டும், அனைத்து தொழிற்சாலைகளிலும் உடனடியாக ஒரே மாதிரியான போனஸ் வழங்கிட வேண்டும், தொழிற்சாலையில் பெண்களை இரவு நேரப் பணிக்கு கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும், ஒவ்வொரு தொழிற்சாலையிலும் பெண்கள் பாதுகாப்பு கருதி புகார் பெட்டி உடனடியாக அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்கோ சர்வ் தலைமை அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த முற்றுகையிட்டு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.