தடாகம் பகுதியில் காற்று மாசு அளவீட்டு கருவிகளை 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை மனு

கோவை : கோவை தடாகம் பகுதியில் காற்று மாசை அளவிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள கருவிகளை 6 மாதம் வரை நீட்டித்து அளவீடுகளை எடுத்தால் மட்டுமே உரிய மாசு அளவுகள் தெரியவரும் என விவசாய சங்கத்தினர் வலியுறுத்தினர்.


கோவை : கோவை தடாகம் பகுதியில் காற்று மாசை அளவிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள கருவிகளை 6 மாதம் வரை நீட்டித்து அளவீடுகளை எடுத்தால் மட்டுமே உரிய மாசு அளவுகள் தெரியவரும் என விவசாய சங்கத்தினர் வலியுறுத்தினர்.



இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் மனு ஒன்றை அவர்கள் அளித்தனர். அம்மனுவில் இந்த மாசு அளவிடும் கருவிகளை 6 மாதங்களை வரை தொடர்ந்து கண்காணித்து அதன் அளவீடுகளைக் குறிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், தற்போது தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் மழை பெய்து வருவதால் காற்றில் இருக்கும் பேர் டஸ்ட் எனப்படும் மாசின் அளவு குறைவாக இருக்கும் என தெரிவித்தனர். மேலும், தற்போது செங்கல் சூளை அதிபர்கள் சூளைகளை இயக்காமல் இருப்பதாகவும் லாரிகளை இயக்காமல் இருப்பதாகவும் கூறிய அவர்கள், இதனால் நிச்சயம் மாசின் அளவுகளை முழுமையாக அளவிட முடியாது என கூறினர்.

எனவே, தற்போது எடுக்கப்படும் மாசு அளவுகளால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை எனக்கூறிய அவர்கள், 6 மாதங்கள் வரை நீட்டிக்கும் பட்சத்தில், மீண்டும் சூளைகள் இயக்கப்பட்டு, லாரிகளின் இயக்கமும் அதிகரிக்கும் போது உண்மையான அளவுகளை அறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தனர்.

ஏற்கனவே, தடாகம் பகுதியில் மழையின் அளவு குறைந்துள்ளதோடு, தண்ணீர் ஓடைகள், வாய்க்கால்கள் மற்றும் நீர் தேங்கும் இடங்கள் செங்கல் சூளைகளுக்காக மண் எடுப்பதால், காய்ந்து போய் நீரின்றி இருப்பதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது எடுக்கப்படும் அளவீடுகளை கொண்டு நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்காது எனவும் தெரிவித்தனர்.

கோவை தடாகம் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு அளவுகளை கணக்கிட 9 கிராமங்களில் காற்று மாசு அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...