ஆடுகளை விஷம் வைத்து கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா

கோவை : ஆடுகளை விஷம் வைத்து கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சத்திய நகரைச் சார்ந்த ஜெகநாதன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : ஆடுகளை விஷம் வைத்து கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சத்திய நகரைச் சார்ந்த ஜெகநாதன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்க வந்த மனுவில் கூறியிருப்பதாவது :

கோவை பி.பி.எஸ் காலேஜ் ரோடு அருகே சத்திய நகர் பகுதியில் கடந்த 30 வருடங்களாக ஆடுகளை மேய்த்து தொழில் நடத்தி வருகிறேன். அதே பகுதியில் வீட்டின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள நபர்கள் முன்விரோதம் காரணமாக நான் வளர்த்து வந்த 4 ஆடுகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார்கள். அவர்கள் மீது வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். ஆனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனிடையே புகார் கொடுத்ததாக என்னை அவர்கள் மிரட்டுகிறார்கள். எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், ஆடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



இதனிடையே தர்ணாவில் ஈடுபட்ட ஜெகநாதனை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து சமாதானம் பேசி அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...