மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே டெங்கு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை : மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளிடையே டெங்கு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை : மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளிடையே டெங்கு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதகாலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகள், சாக்கடைகள், பயன்படுத்தாத பிளாஸ்டிக் பொருட்கள் என ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கின்றன. இதனால் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாவதை கட்டுப்படுத்தும் வகையில் மேட்டுப்பாளையம் லயன்ஸ் கிளப் நகராட்சியுடன் இனைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ மாணவிகளிடையே டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்தும் அதனைத் தடுக்க சுற்றுப்புறத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து மேட்டுப்பாளையம் அரசு மகாஜன பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில், கோமாளி வேடமணிந்த நகராட்சி ஊழியர் ஜெயனாமன், ஆடிப்பாடி குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் மனதில் பதியும் நோக்கில் டெங்கு கொசு உருவாவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும், அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மருத்துவர்களைக் கொண்டு திடீர் காய்ச்சல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் நிலவேம்பு கசாயம், பப்பாளி சாறு ஆகியவையின் மருத்துவ குணம் குறித்து விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...