நீலகிரி : நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே கெத்தை பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் மீண்டும் அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே கெத்தை பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் மீண்டும் அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
மஞ்சூர் அருகே கெத்தை பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதுடன், இரவு நேரங்களில் மின்வாரிய குடியிருப்பு வளாகத்தில் முகாமிடுவதால் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த வாரம், 5 காட்டு யானைகள் மின்வாரிய ஆய்வு மாளிகை கதவுகளை உடைத்து பொருட்களை சேதப்படுத்தியதுடன் மின்வாரிய ஊழியரின் வீட்டு கதவை யானைகள் உடைத்தது. இச்சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக வீட்டுக்குள் இருந்த ஊழியர் உயிர் தப்பினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கெத்தை மின்வாரிய குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் காலியாக இருந்த ஒரு வீட்டின் கதவை உடைத்தது. தொடர்ந்து செல்லதுரை என்பவரின் வீட்டையும் உடைத்து பொருட்களை சேதப்படுத்தியது. தகவலறிந்த வனத்துறையினர் நேற்று காலை கெத்தை பகுதிக்கு சென்று, அங்கு முகாமிட்டிருந்த காட்டு யானைகளை பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்கு விரட்டினர்.
அந்த யானை கூட்டமானது மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மஞ்சூர் அருகே கெத்தை பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதுடன், இரவு நேரங்களில் மின்வாரிய குடியிருப்பு வளாகத்தில் முகாமிடுவதால் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த வாரம், 5 காட்டு யானைகள் மின்வாரிய ஆய்வு மாளிகை கதவுகளை உடைத்து பொருட்களை சேதப்படுத்தியதுடன் மின்வாரிய ஊழியரின் வீட்டு கதவை யானைகள் உடைத்தது. இச்சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக வீட்டுக்குள் இருந்த ஊழியர் உயிர் தப்பினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கெத்தை மின்வாரிய குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் காலியாக இருந்த ஒரு வீட்டின் கதவை உடைத்தது. தொடர்ந்து செல்லதுரை என்பவரின் வீட்டையும் உடைத்து பொருட்களை சேதப்படுத்தியது. தகவலறிந்த வனத்துறையினர் நேற்று காலை கெத்தை பகுதிக்கு சென்று, அங்கு முகாமிட்டிருந்த காட்டு யானைகளை பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்கு விரட்டினர்.
அந்த யானை கூட்டமானது மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.