திருப்பூர் : நெகிழி இல்லா திருப்பூர் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பூர் : நெகிழி இல்லா திருப்பூர் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெகிழியில்லா திருப்பூர் மற்றும் நீர் மேலாண்மை பாதுகாப்பு உள்ளிட்டவை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புஸ்பா ரவுண்டானா வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

13 வயதிற்கு குறைவான சிறுவர்களுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
பரிசுகளை வழங்கிய பின் பேசிய மாவட்ட ஆட்சியர், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை பாதுகாப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை சிறுவர்கள் செய்யும் போது, பிற்காலத்தில் அவர்கள் தலைவர்களாக உருவாகலாம் என பேசினார். நெகிழி இல்லா திருப்பூர் என்பதில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தில் இருப்பது போல, அனைவரும் தங்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதன் மூலமும் திருப்பூர் முதன்மை மாவட்டமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெகிழியில்லா திருப்பூர் மற்றும் நீர் மேலாண்மை பாதுகாப்பு உள்ளிட்டவை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புஸ்பா ரவுண்டானா வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

13 வயதிற்கு குறைவான சிறுவர்களுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
பரிசுகளை வழங்கிய பின் பேசிய மாவட்ட ஆட்சியர், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை பாதுகாப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை சிறுவர்கள் செய்யும் போது, பிற்காலத்தில் அவர்கள் தலைவர்களாக உருவாகலாம் என பேசினார். நெகிழி இல்லா திருப்பூர் என்பதில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தில் இருப்பது போல, அனைவரும் தங்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதன் மூலமும் திருப்பூர் முதன்மை மாவட்டமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.