கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் கல்லூரி மாணவ, மாணவிகளின் சார்பில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் கல்லூரி மாணவ, மாணவிகளின் சார்பில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முன்னதாக நில நடுக்கம் ஏற்படும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி சிறப்பு வட்டாட்சியர் சந்திரன் விளக்கமளித்தார். தொடர்ந்து, கல்லூரி முதல்வர் குணசுந்தரி நில நடுக்கம் அதன் பாதிப்புகள் பற்றி விவரித்தார்.

பின்னர், வால்பாறை கல்லூரி மாணவ, மாணவிகளின் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி கல்லூரியில் துவங்கி, பழைய பேருந்து நிலையம், தபால் நிலையம், காவல் நிலையம் வழியாக நகரின் முக்கிய பகுதிகளில் பேரணி நடைபெற்றது.
ஊர்வலத்தில் வந்தவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர். மேலும் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியில் வால்பாறை சிறப்பு வட்டாட்சியர் சந்திரன், கல்லூரி முதல்வர் குணசுந்தரி, மாணவ மாணவிகள், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நில நடுக்கம் ஏற்படும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி சிறப்பு வட்டாட்சியர் சந்திரன் விளக்கமளித்தார். தொடர்ந்து, கல்லூரி முதல்வர் குணசுந்தரி நில நடுக்கம் அதன் பாதிப்புகள் பற்றி விவரித்தார்.

பின்னர், வால்பாறை கல்லூரி மாணவ, மாணவிகளின் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி கல்லூரியில் துவங்கி, பழைய பேருந்து நிலையம், தபால் நிலையம், காவல் நிலையம் வழியாக நகரின் முக்கிய பகுதிகளில் பேரணி நடைபெற்றது.
ஊர்வலத்தில் வந்தவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர். மேலும் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியில் வால்பாறை சிறப்பு வட்டாட்சியர் சந்திரன், கல்லூரி முதல்வர் குணசுந்தரி, மாணவ மாணவிகள், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.