நீலகிரியில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசுவை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கிருஷ்ணா புதூர் கிராமத்தில் கழிவு நீர் செல்லும் கால்வாயில் விழுந்த பசுமாட்டை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போராடி தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கிருஷ்ணா புதூர் கிராமத்தில் கழிவு நீர் செல்லும் கால்வாயில் விழுந்த பசுமாட்டை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போராடி தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். 



கோத்தகிரி அருகே உள்ள கிருஷ்ணா புதூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியின் அருகே பசு மேய்ச்சலுக்கு விடுபட்டிருந்த நிலையில், அப்பகுதியின் கழிவு நீர் செல்லும் சுமார் 15 அடி ஆழம் கொண்ட கால்வாயினுள் விழுந்து நீண்ட நேரமாக வெளியே வர முடியாமல் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது. 

இச்சம்பவம் குறித்து அறிந்த கிராம மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கால்வாயினுள் விழுந்து வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பசுவை கிராம மக்கள் உதவியுடன் கயிறு மூலம் கால்வாயிலிருந்து பசுவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 



சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடிய அவர்கள் பசுவை உயிருடன் மீட்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...