கோவையில் அனுமதியின்றி செயல்படும் அனைத்து மசாஜ் சென்டரையும் மூட உத்தரவு

கோவை : கோவை மாநகராட்சி மற்றும் காவல்துறை உரிமை பெறாமல் மசாஜ் சென்டர் நடத்துவது சட்டப்படி குற்றம் என்றும் இனிமேல் மசாஜ் சென்டர் நடத்தக்கூடாது, மீறி நடத்தினால் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி காவல் ஆணையர் சோமசுந்தரம் தெரிவித்தார்.


கோவை : கோவை மாநகராட்சி மற்றும் காவல்துறை உரிமை பெறாமல் மசாஜ் சென்டர் நடத்துவது சட்டப்படி குற்றம் என்றும் இனிமேல் மசாஜ் சென்டர் நடத்தக்கூடாது, மீறி நடத்தினால் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி காவல் ஆணையர் சோமசுந்தரம் தெரிவித்தார். 

கோவையில் உள்ள முக்கியமான ஓட்டல்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்களில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடந்து வந்து கொண்டிருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுமித் சரண் உத்தரவிட்டார். 

இதன்பேரில் கடந்த ஒரு வாரமாக போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் கோவை மாநகரில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் இருப்பது தெரியவந்தது, மேலும் மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரிய வந்தது. 6 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்தனர். 

இதுதொடர்பாக கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் கிழக்கு மாநகர பகுதி சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் அலுவலகத்தில் அனைத்து மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடனான கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் உதவி காவல் ஆணையர் சோமசுந்தரம் பேசுகையில், மசாஜ் சென்டர் நடத்துவதற்கு யாரும் எந்த உத்தரவாதமும், மாநகராட்சி மற்றும் காவல்துறை உரிமை பெறாமல் மசாஜ் சென்டர் நடத்துவது சட்டப்படி குற்றம் என்றும் இனிமேல் மசாஜ் சென்டர் நடத்தக்கூடாது, மீறி நடத்தினால் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

மேலும், மசாஜ் சென்டருக்கு இடம் கொடுக்கும் லாட்ஜ் உரிமையாளரும் கட்டட உரிமையாளர்களும் கைது செய்யப்படுவார்கள், ஆகவே அனைத்து மசாஜ் சென்டரையும் உடனடியாக மூட வேண்டும் என்று கூறினார். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...