சீமானின் மனநிலையை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும் : புரட்சிகர இளைஞர் கழகத்தினர் மனு

கோவை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கின்றதா என்பதை கண்டறிந்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அசோகனிடம் புரட்சிகர இளைஞர் கழகத்தினர் இன்று மனு அளித்தனர்.

கோவை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கின்றதா என்பதை கண்டறிந்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அசோகனிடம் புரட்சிகர இளைஞர் கழகத்தினர் இன்று மனு அளித்தனர்.

பின்னர் அந்த அமைப்பின் கோவை மாவட்ட செயலாளர் வேல்முருகன்,தலைவர் பெரோஸ் பாபு ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்தனர்.

அப்போது, அவர்கள் பேசுகையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கின்றதா என்பதை கண்டறிந்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தூய தமிழில் பேசாதவர்களை அடிப்பேன் எனவும், நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர்கள் நாம் தமிழர் கட்சியில் இருப்பார்கள் எனவும், நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்திய 18 லட்சம் பேரை தவிர மற்றவர்கள் தமிழர்கள் அல்ல எனவும் வந்தேறி தெலுங்கு வடுகன் என்றும் பிரிவினைகள் தூண்டும் விதத்தில் சீமான் பேசி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி அடிப்பதும், தூய தமிழில் பேசவில்லை என்றால் முதுகுதோலை உரிப்பேன் என்று சொல்வதும் பாசிச சிந்தனைகளே என கூறிய அவர்கள், எச்.ராஜாவின் மனநிலையை நீதிமன்றம் சோதிக்க சொல்லியதை போல, சீமானின் மனநிலையையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...