நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகள் உள்ளன. இந்த காட்டேஜ்கள் அரசிடம் எந்தவித அனுமதி பெறாமல் குடியிருப்புகளுக்காக அனுமதி பெற்றுக்கொண்டு பின்பு அதை சொகுசு விடுதிகளாக மாற்றியுள்ளனர். மேலும் பல்வேறு புகார்கள் மாவட்ட ஆட்சியரிடம் சென்றதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகள் உள்ளன. இந்த காட்டேஜ்கள் அரசிடம் எந்தவித அனுமதி பெறாமல் குடியிருப்புகளுக்காக அனுமதி பெற்றுக்கொண்டு பின்பு அதை சொகுசு விடுதிகளாக மாற்றியுள்ளனர். மேலும் பல்வேறு புகார்கள் மாவட்ட ஆட்சியரிடம் சென்றதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளனர்.

மேலும், ஒரு சிலர் வீடுகளில் வியாபாரம் செய்வதால் அந்த வீடுகளுக்கும் சீல் வைக்கும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளனர். இன்று மாலை 6 மணி வரை 7 காடேஜ்களுக்கு சீல் வைக்கப்பட்டது. பெரும்பாலும் இந்த காட்டேஜ்கள் காட்டுப் பகுதிகளை ஒட்டி உள்ளன. இதனால் வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் வருவதால் அதிக அளவில் பொதுமக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் காட்டுப் பகுதியில் ஒட்டியுள்ள சொகுசு விடுதிகளுக்கு உடனடியாக சீல் வைக்கும் பணியில் தொய்வின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஒரு சிலர் வீடுகளில் வியாபாரம் செய்வதால் அந்த வீடுகளுக்கும் சீல் வைக்கும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளனர். இன்று மாலை 6 மணி வரை 7 காடேஜ்களுக்கு சீல் வைக்கப்பட்டது. பெரும்பாலும் இந்த காட்டேஜ்கள் காட்டுப் பகுதிகளை ஒட்டி உள்ளன. இதனால் வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் வருவதால் அதிக அளவில் பொதுமக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் காட்டுப் பகுதியில் ஒட்டியுள்ள சொகுசு விடுதிகளுக்கு உடனடியாக சீல் வைக்கும் பணியில் தொய்வின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.