கோவை மத்திய சிறை நுழை வாயில் முன்பு உள்ள சிறை பஜாரை சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

கோவை : கோவை மத்திய சிறை நுழைவாயில் அருகே சிறை நிர்வாகத்தினரால் புதியதாக மற்றுமொரு சிறை பஜார் இன்று திறக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை மத்திய சிறை நுழைவாயில் அருகே சிறை நிர்வாகத்தினரால் புதியதாக மற்றுமொரு சிறை பஜார் இன்று திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறைத் துறை மூலம் கைதிகளின் நல்வாழ்வுக்கு ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மத்திய சிறை வளாகம் முன்பு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உதவியுடன் நன்னடத்தை கைதிகளை கொண்டு பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே முடிதிருத்தும் கடைகள், ஆவின் பாலகங்கள் என அடுத்தடுத்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வளாகங்களில் கோவை மத்திய சிறையில் தண்டனை பெற்று வரும் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் சுழற்சிமுறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று கோவை மத்திய சிறையில் உள்ள தண்டனை கைதிகளை பார்வையிட வரும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கைதிகளுக்கு தேவையான பெட்ஷீட், துண்டு போர்வைகள், இனிப்பு வகைகள், கார வகைகள் உட்பட பல்வேறு பொருட்களை சிறைக்கைதிகளுக்கு வாங்கிச் செல்வதற்காக புதியதாக ஒரு சிறு பஜார் போன்ற அங்காடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 



இந்த பஜாரில் நடைபெறும் விற்பனையை நன்னடத்தை கைதிகள் நடத்துவர். இந்த அங்காடியை கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் இன்று துவக்கி வைத்தார்.

மேலும் சிறையில் தண்டனை பெற்று வரும் கைதிகள் தங்களது எதிர்காலத்தை சரியான முறையில் நடத்த இது போன்ற தொழில் முறைகள் உதவியாக இருக்கும் என சிறை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...