குன்னூர் தேயிலை தோட்டங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் கரடிகள் ; கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

நீலகிரி : குன்னூர் அருகே அளக்கரை பகுதியில் ஒரு குட்டியுடன் வந்த மூன்று கரடிகளை கண்ட தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். கரடிகள் மனிதர்களை தாக்கும் முன்பு வனப்பகுதிக்குள் விரட்டி விட வேண்டும் அல்லது கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

நீலகிரி : குன்னூர் அருகே அளக்கரை பகுதியில் ஒரு குட்டியுடன் வந்த மூன்று கரடிகளை கண்ட தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். கரடிகள் மனிதர்களை தாக்கும் முன்பு வனப்பகுதிக்குள் விரட்டி விட வேண்டும் அல்லது கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் அளக்கரை பகுதியில் வனப்பகுதியில் இருந்து ஒரு குட்டியுடன் மூன்று கரடிகள் உணவு தேடி தனியாருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்தது. ஒரே நேரத்தில் மூன்று கரடிகள் தேயிலை தோட்டத்திற்குள் வருவதை கண்டு அங்கு தேயிலை பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர், இதுகுறித்து உடனடியாக கட்டப்பெட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் வருவதற்குள் இந்த கரடிகள் அருகில் உள்ள சோலைக்குள் புகுந்தது. கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் கரடிகள் நடமாட்டம் இருக்கும் நிலையில், கரடிகள் மனிதர்களை தாக்கும் முன்பு வனப்பகுதிக்குள் விரட்டி விட வேண்டும் அல்லது கூண்டு வைத்துப் பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட வேண்டும் என இப்பகுதியில் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...