திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஸ்டேட் பாங்க் வங்கியின் ஜன்னலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஸ்டேட் பாங்க் வங்கியின் ஜன்னலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கே.கள்ளப்பாளையத்தில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் பாங்க் வங்கியில் சனிக்கிழமையன்று பணி முடிந்ததும் அலுவலர்கள் வங்கியைப் பூட்டி விட்டு சென்றுள்ளனர். ஞாயிறு முதல் ஆயுதபூஜை,விஜயதசமி போன்ற விடுமுறை தினம் என்பதால் இன்று காலை 10 மணி அளவில் மீண்டும் பணிக்குத் திரும்பிய அலுவலர்கள் வங்கியை திறந்து பார்த்தபோது ஏடிஎம் இயந்திரம் வேறு இடத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், வங்கியின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு கொள்ளையர்கள் வங்கியில் புகுந்தது தெரிய வந்தது.

மேலும் வங்கியை சுற்றிப் போடப்பட்டுள்ள முள்வேலிகளை துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்ததும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, வங்கி ஊழியர்கள் காமநாயக்கன் பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் வங்கியில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணம் நகைகள் ஏதாவது திருடப்பட்டுள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கே.கள்ளப்பாளையத்தில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் பாங்க் வங்கியில் சனிக்கிழமையன்று பணி முடிந்ததும் அலுவலர்கள் வங்கியைப் பூட்டி விட்டு சென்றுள்ளனர். ஞாயிறு முதல் ஆயுதபூஜை,விஜயதசமி போன்ற விடுமுறை தினம் என்பதால் இன்று காலை 10 மணி அளவில் மீண்டும் பணிக்குத் திரும்பிய அலுவலர்கள் வங்கியை திறந்து பார்த்தபோது ஏடிஎம் இயந்திரம் வேறு இடத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், வங்கியின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு கொள்ளையர்கள் வங்கியில் புகுந்தது தெரிய வந்தது.

மேலும் வங்கியை சுற்றிப் போடப்பட்டுள்ள முள்வேலிகளை துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்ததும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, வங்கி ஊழியர்கள் காமநாயக்கன் பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் வங்கியில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணம் நகைகள் ஏதாவது திருடப்பட்டுள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.