கோவை : கோவை மாவட்டம் கவுண்டர் மில்ஸ் மற்றும் சாய்பாபா காலணி பகுதியை சேர்ந்த இரு குடும்பத்தை சேர்ந்த 51 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இன்று மதியம் விடுமுறை தினத்தை கொண்டாட மேட்டுப்பாளையம் வந்துள்ளனர்.
கோவை : கோவை மாவட்டம் கவுண்டர் மில்ஸ் மற்றும் சாய்பாபா காலணி பகுதியை சேர்ந்த இரு குடும்பத்தை சேர்ந்த 51 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இன்று மதியம் விடுமுறை தினத்தை கொண்டாட மேட்டுப்பாளையம் வந்துள்ளனர்.

இவர்கள் வீட்டிலேயே உணவினை சமைத்து எடுத்துகொண்டு மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் பின்புறம் உள்ள பவானி ஆற்றில் குளிப்பதற்காகவும் பொழுதை கழிப்பதற்காகவும் வந்துள்ளனர்.
அங்குள்ள காரமடை நீரேற்று நிலையத்திற்காக பம்பவுஸ் பகுதியில் பவானி ஆற்றில் இன்று மதியம் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக இருந்துள்ளது. இதன் பின்னர் அனைவரும் ஆற்றினை கடந்து அக்கறைக்கு உணவு உண்ண சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் அங்கேயே பொழுதை கழித்து கொண்டிருந்த சூழலில் திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. படிப்படியாக நீரின் வேகம் அதிகரித்து தண்ணீர் ஆர்பரித்து வந்ததை கண்டு அதிர்ந்து போன அவர்கள் அக்கறையில் இருந்து மீண்டும் இக்கரைக்கு வர செய்வதறியாது தவித்தனர்.
இதனை தொடர்ந்து தாங்கள் வெள்ளத்தால் சிக்கி கொண்டது குறித்து மேட்டுப்பாளையம் தீயனைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த தீயனைப்பு துறையினர் பரிசல் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பகுதியில் வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள் அடிக்கடி இதுபோன்று மாட்டிகொள்வதால், இப்பகுதியில் பொதுமக்கள் நுழையாதுவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.