ஆயுதபூஜை முன்னிட்டு வேனை சுத்தம் செய்யும் போது ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் பலி

திருப்பர் : திருப்பூரில் ஆயுதபூஜை பராமரிப்பு பணியின் போது பால் வேன் ஓட்டுனர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருப்பர் : திருப்பூரில் ஆயுதபூஜை பராமரிப்பு பணியின் போது பால் வேன் ஓட்டுனர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (39). இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், ஜெயலட்சுமி மற்றும் ஜெயமணி என இரு மகள்களும் ஜெகன் என்ற மகனும் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடன் அவினாசியை அடுத்து வேட்டுவபாளையம் கிராமத்தில் குடியிருந்து கொண்டு அதே பகுதியில் பால் வியாபாரியின் வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இதேபோல, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அடுத்துள்ள சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(35) என்பவரும் வேட்டுவபாளையத்தில் தனது குடும்பத்துடன் வசித்து கொண்டு அதே பால் வியாபாரியிடம் வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். ஆயுதபூஜை நாளான நேற்று சின்னத்தம்பி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் அவரவர் ஓட்டும் வேனை சுத்தம் செய்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுக் கொண்டனர். இதில் சின்னத்தம்பி அருகிலிருந்த கட்டையால் மணிகண்டனை தாக்கியுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த கத்தியை எடுத்து சின்னதம்பியின் மார்பில் இரண்டுமுறை குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சின்னதம்பியை அக்கம் பக்கம் இருந்தவர்கள் எடுத்துக்கொண்டு அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்துவிட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சின்னதம்பி உயிரிழந்தார். இதையடுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மணிகண்டனை சேயூர் போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...