கோவையில் 10 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய வழிப்பறி கொள்ளையனை போலீசார் நேற்று மடக்கிப்பிடித்தனர் 

கோவை : கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சொர்ண கணேஷ்.இவர் சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பாலமுரளி (26) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் பணம் பறித்துள்ளார்.

கோவை : கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சொர்ண கணேஷ்.இவர் சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பாலமுரளி (26) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் பணம் பறித்துள்ளார்.

இதையடுத்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில், சொர்ண கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையிலான உதவி ஆய்வாளர்கள் அர்ஜுன், காசி பாண்டி ஆகியோர் அடங்கிய குழுவினர் வழிப்பறி கொள்ளையினை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நேற்று மாலை போலீசார் அதே பகுதியில் தலைமறைவாக இருந்த பாலமுரளியை மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்த கத்தியை கைப்பற்றினர். இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இவர் மீது கொலை முயற்சி ,கொள்ளை வழக்கு, கஞ்சா வழக்கு ,வழிப்பறி வழக்கு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பவை குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...