உதகை மலைப்பாதையில் டெம்போ வேன் கவிழ்ந்து விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிா் தப்பிய 22 கல்லூரி மாணவர்கள்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் உதகை மலைப்பாதையில் பிரேக் பிடிக்காமல் டெம்போ வேன் கவிழ்ந்து விபத்தில் அதிர்ஷ்டவசமாக 22 கல்லூரி மாணவர்கள் உயிர் தப்பினர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் உதகை மலைப்பாதையில் பிரேக் பிடிக்காமல் டெம்போ வேன் கவிழ்ந்து விபத்தில் அதிர்ஷ்டவசமாக 22 கல்லூரி மாணவர்கள் உயிர் தப்பினர்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது இரண்டாம் சீசன் துவங்கியுள்ளதாலும் மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் மலைப்பாதைகளில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சிவகாசியிலிருந்து 22 கல்லூரி மாணவர்கள் உதகைக்கு சுற்றுலா வந்து சுற்றிப்பாா்த்து விட்டு மீண்டும் சிவகாசிக்கு டெம்போ வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, உதகை, குன்னூர் மலைப்பாதையில் உள்ள காணிக்கராஜ்நகா் அருகே வரும் போது டெம்போவேனில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் அனைவரும் உயிா்தப்பினா்.



இதனையடுத்து, பின்னே வந்த வாகன ஒட்டிகள் வேனில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டனர். இதில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்குச் சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக குன்னூர் உதகை மலைப்பாதையில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இந்த விபத்து குறித்து அருவங்காடு போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர்

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...