கோவை : கோவை - பொள்ளாச்சி சாலை விரிவாக்கப்பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. தார்ச்சாலைக்கு பதிலாக தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த சாலை கான்கிரீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.
கோவை : கோவை - பொள்ளாச்சி சாலை விரிவாக்கப்பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. தார்ச்சாலைக்கு பதிலாக தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த சாலை கான்கிரீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கிணத்துக்கடவு அடுத்துள்ள முள்ளுப்பாடி ரயில்கேட் பகுதியில், 42 கோடி ரூபாய் மதிப்பில் அரைவட்ட இரும்பு மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதன் தெற்கு பகுதியில், அரைவட்ட பாலத்தை இணைக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, அரைவட்ட பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதில், பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் பகுதியில் அரைவட்ட இரும்பு பாலம் கான்கிரீட் துாண்களுக்கு மேல் வைக்கப்பட்டு, கான்கிரீட் ரோடு போடப்பட்டுள்ளது.
அரைவட்ட இரும்புபாலம், 11 மீட்டர் நீளம், 8 மீட்டர் அகலத்தில் வாகனங்கள் செல்வதற்காக கான்கிரீட் ரோடும், 3 மீட்டர் அகலத்தில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கும் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.