கோவையிலுள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயம் பசிலிக்காவாக (புனித தளம்) அறிவிக்கப்பட்டது

கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 379 தேர்த்திருவிழா இன்று, நடைபெறுகிறது.

கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 379 தேர்த்திருவிழா இன்று, நடைபெறுகிறது. 



கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தேர்த்திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு திருப்பலிகள், ஆராதனைகள் நடைபெற்றது. தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கூட்டுப்பிரார்த்தனை ஞாயிறு காலை 8 மணிக்கு துவங்கியது. சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.



பின்னர், புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரத்தில் கொடியை ஏற்றிவைத்து அந்த ஆலயத்தை பசிலிக்காவாக (புனித தலம்) அறிவித்த அவர் ரோமில் இருந்து அளிக்கப்பட்ட கடிதத்தை பொதுமக்கள் முன்னிலையில் படித்து காட்டினார். 

இதனைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இன்று இரவு புனித அன்னை ஜெபமாலை திருத்தேர் ஊர்வல நிகழ்ச்சிகளுடன் முடிவடைகிறது. 

இதுகுறித்து கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கூறுகையில், "மிகவும் பழமைவாய்ந்த இந்த திருத்தலத்தை பசிலிக்காவாக அறிவிக்க கோரி ரோமில் உள்ள தலைமையகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்ததன் பெயரில் தற்போது புனித தலமாக (பசிலிக்கா) இந்த ஆலயம் அறிவிக்கப்பட்டது."

இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதனைத் தொடர்ந்து இந்த ஆலயத்தில் நாள்தோறும் பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். 

தேர் திருவிழாவை ஒட்டி தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

தேர் திருவிழாவையொட்டி 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...