ஆயுத பூஜையை முன்னிட்டு களைகட்டியது திருப்பூர்

திருப்பூர் : ஆயுத பூஜையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பூஜைக்குத் தேவையான பொருட்களான பொரிகடலை, வாழை மரம், பூக்கள், பழங்கள், மாவிலைகள், கரும்புகள், சந்தனம், குங்குமம், கலர் கோலப்பொடிகள் விற்பனை களைகட்டியுள்ளது.


திருப்பூர் : ஆயுத பூஜையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பூஜைக்குத் தேவையான பொருட்களான பொரிகடலை, வாழை மரம், பூக்கள், பழங்கள், மாவிலைகள், கரும்புகள், சந்தனம், குங்குமம், கலர் கோலப்பொடிகள் விற்பனை களைகட்டியுள்ளது. 



கடந்தாண்டு விற்பனை போலவே இந்த ஆண்டும் வாழைமரம் ஜோடி 30 ரூபாயும், மாவிலை தோரணங்கள் 10 ரூபாய்க்கும், கரும்புகள் ஜோடி 100 ரூபாய் முதல் விற்கப்படுகின்றன. சாதாரண நாட்களில் விற்கப்படுகின்ற பழங்களின் விலை கடந்த ஆண்டைப் போலவே விழா நாட்களுக்காக 50 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது.



நேற்று முன்தினம் கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆப்பிள் தற்போது 180 ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆரஞ்ச் தற்போது 120 ரூபாய்க்கும், 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட மாதுளை தற்போது 140 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றனர். 



அதேபோல், பூக்களின் வரத்து பெருமளவு குறைந்து உள்ளதால் நேற்று முன்தினம் கிலோ 600 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ இன்று 1,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல, 300 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த முல்லைப்பூ தற்போது 500 ரூபாய்க்கும், 240 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஜாதி மல்லி பூ தற்பொழுது 480 ரூபாய்க்கும், கிலோ நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த செவ்வந்திப்பூ தற்போது 320 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

பழங்கள் மற்றும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ள நிலையிலும் பொதுமக்கள், மில் உரிமையாளர்கள் மற்றும் பிற தொழில் செய்பவர்கள் பெரும் அளவில் பூஜை பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...