நீலகிரி : உதகை தாவரவியல் பூங்காவில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை முட்புதருகுள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த பிஞ்சு குழந்தையை விட்டுச் சென்ற தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
நீலகிரி : உதகை தாவரவியல் பூங்காவில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை முட்புதருகுள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த பிஞ்சு குழந்தையை விட்டுச் சென்ற தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவிற்குள் ஒரு புதரிலிரிந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு பதறி போன தாேடர் இனப் பெண்கள் அங்கு சென்று பார்த்த போது பிறந்து சில மணி நேரமான பச்சிளம் குழந்தையை யாரோ வீசி சென்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தையை மீட்ட அந்த பெண்கள், பூங்கா அதிகாரி மற்றும் 108 வாகனத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அங்கு வந்த உதகை அரசு மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த B1 போலீசார் வழக்கு பதிவு செய்து உதகை பூங்கா மற்றும் கார்டன் சாலையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, பெரும்பாலான கேமராக்கள் வேலை செய்யாததால் பச்சிளம் குழந்தையை யார் வீசி சென்றார்கள் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவிற்குள் ஒரு புதரிலிரிந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு பதறி போன தாேடர் இனப் பெண்கள் அங்கு சென்று பார்த்த போது பிறந்து சில மணி நேரமான பச்சிளம் குழந்தையை யாரோ வீசி சென்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தையை மீட்ட அந்த பெண்கள், பூங்கா அதிகாரி மற்றும் 108 வாகனத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அங்கு வந்த உதகை அரசு மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த B1 போலீசார் வழக்கு பதிவு செய்து உதகை பூங்கா மற்றும் கார்டன் சாலையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, பெரும்பாலான கேமராக்கள் வேலை செய்யாததால் பச்சிளம் குழந்தையை யார் வீசி சென்றார்கள் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.