கோவை : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் கோவை உட்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் கோவை உட்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலா 20 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவினாசியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை உள்பட 13 பேர் டெங்கு பாதிப்புக்கு சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறும்போது:-
டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு கோவையை சேர்ந்த 5 பேர், திருப்பூரை சேர்ந்த 3 பேர், நீலகிரியை சேர்ந்த 2 பேர் உள்பட 13 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அவினாசியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை தீவிர கண்காணிப்பில் உள்ளார். அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
எனவே, பொது மக்கள் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்,' என தெரிவித்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.
இதையடுத்து சுகாதாரத்துறை தனது பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலம் காய்ச்சல்கள் பரவுவதை தடுத்தது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது.
தற்போது தமிழகத்தில், தொடர் பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.