தமிழகத்திலேயே, கோவையில் நீளமான மேம்பாலம் - அமைச்சர் எஸ்.பி வேலுமணி பெருமிதம்

கோவை : தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் கோவை - அவினாசி சாலையில் 9.5 கி.மீ தூரத்திற்கு வெளிநாடுகளில் இருப்பதை போல பாலம் அமைக்கும் பணி விரைவில் துவங்க இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.



கோவை : தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் கோவை - அவினாசி சாலையில் 9.5 கி.மீ தூரத்திற்கு வெளிநாடுகளில் இருப்பதை போல பாலம் அமைக்கும் பணி விரைவில் துவங்க இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.



கோவை புலியகுளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று 894 பயனாளிகளுக்கு 3.71 கோடி மதிப்புடைய நலதலதிட்ட உதவிகள் வழங்கினார். 



இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், மாவட்ட ஆட்சியர் ராசாமணி உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு குறை தீர்க்கும் முகாமினை துவக்கி வைத்த பின்னர் பேசிய அமைச்சர் எஸ். பி.வேலுமணி, இந்த திட்டத்தை பயன்படுத்தி மக்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மனு வாங்கத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது என தெரிவித்த அவர், இது போன்ற கூட்டங்களில் ஏதாவது ஒரு பிட்டை போட்டு கோரிக்கையை வைப்பது தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூன்னின் வழக்கம் என கிண்டலாக தெரிவித்தார். .



மனு வாங்கத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது என தெரிவித்த அவர், இது போன்ற கூட்டங்களில் ஏதாவது ஒரு பிட்டை போட்டு கோரிக்கையை வைப்பது தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூன்னின் வழக்கம் என கிண்டலாக தெரிவித்தார். 

கோவை தெற்கு தொகுதியில் மகளிர் கல்லூரியை கொண்டு வர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார் எனவும் முதல்வரிடம் இந்த கோரிக்கையை அவர் வைத்திருக்கின்றார் எனவும் அவர் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்திற்கு ஏற்கனவே 4 கல்லூரியை பெற்றுக் கொடுத்து இருக்கின்றோம் என தெரிவித்த அவர், கோவை நகரில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, பாலங்கள் வேலை வேகமாக நடந்து வருகின்றது எனவும், அவினாசி சாலையில் 9.5 கி.மீ தூரதரதிற்கு பாலம் அமைக்கப்பட இருக்கின்றது எனவும் தெரிவித்தார். 

தமிழகத்தில் இது போன்ற பாலம் எங்கும் இல்லை என தெரிவித்த அவர் தாய்லாந்து, பெங்களூர் போன்ற இடங்களில் இருப்பதை போல இந்த பாலம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும், கோவையில் மெட்ரோ ரயில் கொண்டு வருவதற்கான பிள்ளையார் சுழியை போட்டுள்ளோம் என தெரிவித்த அவர், மக்களின் பொழுது போக்கிற்காக உக்கடம் குளம் மெரீனா பீச் போல மாற்றப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார். நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது என்னென்ன திட்டங்கள் கொண்டு வர முடியுமோ அனைத்து திட்டங்களும் இங்கு கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 



இதனை தொடர்ந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்று கொண்ட அமைச்சர் வேலுமணி அதிகாரிகளிடம் அவற்றிக்கு உடனடி தீர்வு காண அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...