பணியின் போது இறந்த காவலர்களின் வீரத்தினை நினைவூட்டும் கோவையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

கோவை : கோவை மாநகரில் காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தெருக்கூத்து நடைபெற்றது.

கோவை : கோவை மாநகரில் காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தெருக்கூத்து நடைபெற்றது.



காவல்துறையில் பணியாற்றி, பணியின் போது இறந்த காவலர்களின் வீரத்தினை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி வீர வணக்கம் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று கோவை மாநகர காவல் துறை சார்பில் கடந்த 1985ம் ஆண்டு கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளால் கொலை செய்யப்பட்ட காவலர் ராஜரத்தினம், 2011ம் ஆண்டு விபத்து ஏற்படுத்திய லாரியை பிடிக்கச் சென்ற போது அந்த லாரியால் உயிரிழந்த காவலர் சந்திரசேகரன், கோவையில் 1997ம் ஆண்டு தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த மூவரால் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட முதல்நிலை காவலர் செல்வராஜ் ஆகிய 3 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருக்கூத்தும் நடத்தப்பட்டது. பறை இசை நடனம் என நடைபெற்ற இந்த நிகழ்வானது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



மேலும், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த நிகழ்வு, சிங்காநல்லூர் பேருந்து நிலையம், சுங்கம் வீதி, சுந்தராபுரம், உக்கடம் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...