தென்திருமலை எனப்படும் ஸ்ரீவெங்கடேச பெருமாள் ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ கருடசேவை நிகழ்ச்சி

கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை எனப்படும் ஸ்ரீவெங்கடேச பெருமாள் ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருடசேவை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வெங்கடேசபெருமாளை சேவித்தனர்.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை எனப்படும் ஸ்ரீவெங்கடேச பெருமாள் ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருடசேவை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வெங்கடேசபெருமாளை சேவித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த ஜடையம்பாளையத்தில் உள்ள தென்திருமலை என அழைக்கப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆந்திராவில் உள்ள திருப்பதி ஆலயத்தில் நடைபெறும் வழக்கப்படி, அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக நடைபெறும். அதன் ஒரு பகுதியாக வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று மலையப்பசுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் இன்று நடைபெற்றது.



காலையில் சிறப்பு யாகவேள்வில் நடத்தப்பட்டு ஸ்ரீவல்லிபத்தூர் ஆண்டாள் ஆலயத்தில் இருந்து ஆண்டாள் மலர்மாலை கொண்டுவரப்பட்டு மூலவர் வெங்கடேச பெருமாளுக்கு சாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மலையப்பசாமி கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வரும் கருடசேவை வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலையப்பசாமி கருட வாகனத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.

இதனையடுத்து வேதவிற்பனர்கள் மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் மலையப்பசாமி திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். அப்போது, பெண்கள் கற்கண்டு, பழங்கள் தட்டில் வைத்து மலையப்பசாமியை கோவிந்தா கோவிந்தா கோசங்களை எழுப்பி மலையப்பசாமியை வணங்கினர். வசந்த மண்டபத்தில் இருந்து துவங்கிய இந்த கருடசேவையானது நான்குமாட வீதிகளின் வழியே மீண்டும் வசந்த மண்டபம் வந்து நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோராட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...