கோவை : கோவை ஜீவா நகர் பகுதியில் குடியிருந்து வந்தவர்கள் காலி செய்து கொள்வதாக உறுதியளித்தை தொடர்ந்து மேலும் ஒரு வார கால அவகாசத்தை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது.
கோவை : கோவை ஜீவா நகர் பகுதியில் குடியிருந்து வந்தவர்கள் காலி செய்து கொள்வதாக உறுதியளித்தை தொடர்ந்து மேலும் ஒரு வார கால அவகாசத்தை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது.
கே.கே. நகர் பகுதி மக்கள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் கோவை மேட்டுப்பாளையம் சாலை ஜீவா நகரில் இருந்த 247 வீடுகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 150க்கும் மேற்பட்ட குடிசைவாசிகள் சரவணம்பட்டி கீரணத்தம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு குடிபெயர்ந்தனர்.
இதனிடையே வீடுகளை காலி செய்ய மறுத்து போராட்டங்களில் சிலர் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்கள் காலி செய்ய அக்டோபர் 1 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்ததோடு, மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அன்று வீடுகளை காலி செய்து கொண்டிருந்த ஜெயராம் மற்றும்
விஷ்ணு ஆகிய இரண்டு இளைஞர்கள் அருகாமையில் சென்ற மின்சார கம்பியில் இரும்பு கம்பு உரசியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
இதனிடையே வீடுகளை காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தங்களுக்கு சரவணம்பட்டி பகுதியிலுள்ள காப்பி கடை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்குமாறும் ஜீவா நகர் பகுதிவாசிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்ற மாநகராட்சி ஆணையாளர் ஷிரவண் குமார் ஜடாவத், ஒரு வார கால அவகாசம் கூடுதலாக வழங்கியதோடு, அவர்களின் கோரிக்கையையும் பரிலீப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து ஜீவா நகரில் உள்ள வீடுகளை பொதுமக்கள் காலி செய்து வருகின்றனர். ஒரு வார காலத்திற்கு பிறகு இந்த வீடுகளில் மீதமுள்ள வீடுகளை பொக்லைன் கொண்டு இடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
கே.கே. நகர் பகுதி மக்கள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் கோவை மேட்டுப்பாளையம் சாலை ஜீவா நகரில் இருந்த 247 வீடுகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 150க்கும் மேற்பட்ட குடிசைவாசிகள் சரவணம்பட்டி கீரணத்தம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு குடிபெயர்ந்தனர்.
இதனிடையே வீடுகளை காலி செய்ய மறுத்து போராட்டங்களில் சிலர் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்கள் காலி செய்ய அக்டோபர் 1 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்ததோடு, மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அன்று வீடுகளை காலி செய்து கொண்டிருந்த ஜெயராம் மற்றும்
விஷ்ணு ஆகிய இரண்டு இளைஞர்கள் அருகாமையில் சென்ற மின்சார கம்பியில் இரும்பு கம்பு உரசியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
இதனிடையே வீடுகளை காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தங்களுக்கு சரவணம்பட்டி பகுதியிலுள்ள காப்பி கடை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்குமாறும் ஜீவா நகர் பகுதிவாசிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்ற மாநகராட்சி ஆணையாளர் ஷிரவண் குமார் ஜடாவத், ஒரு வார கால அவகாசம் கூடுதலாக வழங்கியதோடு, அவர்களின் கோரிக்கையையும் பரிலீப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து ஜீவா நகரில் உள்ள வீடுகளை பொதுமக்கள் காலி செய்து வருகின்றனர். ஒரு வார காலத்திற்கு பிறகு இந்த வீடுகளில் மீதமுள்ள வீடுகளை பொக்லைன் கொண்டு இடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.