கோவை : தடாகம் பள்ளத்தாக்கு பகுதிகளில் மணல் அள்ளுவதை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள வலுத்து வரும் நிலையில் மருதமலை அடிவாரம் பகுதியை நோக்கி செங்கல் சூளைகள் பார்வையை திருப்பியுள்ளதாக எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கோவை : தடாகம் பள்ளத்தாக்கு பகுதிகளில் மணல் அள்ளுவதை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள வலுத்து வரும் நிலையில் மருதமலை அடிவாரம் பகுதியை நோக்கி செங்கல் சூளைகள் பார்வையை திருப்பியுள்ளதாக எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
செங்கல் சூளைகளுக்காக மணல் அள்ளுவதை முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அரசு கடந்த சில நாட்களாக எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக செங்கல் சூளை அதிபர்கள் மணல் அள்ளுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க சத்தமில்லாமல் சட்டவிரோதமாக மருதமலை அடிவார பகுதிகளில் செங்கற்களுக்கான செம்மண் அள்ளும் பணிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
ஓசை தன்னார்வ அமைப்பை சேர்ந்த சையத் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இன்று மாலை (04.10.2019) மருதமலை அருகே உள்ள சின்னமலை அடிவாரத்தின் தம்புராயன் துறை பகுதியில் புதரில் மறைந்து நின்றிருந்த செம்மண் லாரி ஒன்றை மடக்கிய சையத், அதன் ஓட்டுனரிடம் அனுமதி கடிதங்களை கேட்டுள்ளார்.
முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்த ஓட்டுனரிடம் இருந்த அனுமதி கடிதம் சின்னத்தடாகம் பகுதியில் மணல் அள்ளுவதற்கான உரிமங்கள் என்பதும் அவை கடந்த ஏப்ரல் மாதத்துடன் காலாவதியானதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சையத், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்த போதும், யாரும் அங்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் சிலரின் உதவியுடன் இது தொடர்பாக சையத் விவரங்களை கேட்டறிந்துள்ளார்.

செம்மண் அள்ளி வந்த லாரி அனன்யா செல்டர்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும் ஏ.பி.டபிள்யூ செங்கல் சூளைக்கு மணல் கொண்டு செல்லப்பட இருந்ததும் தெரியவந்துள்ளதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது மேலும் மனித விலங்கு மோதல்களுக்கு வழி வகுக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக விளக்கமறிய சிம்பிளிசிட்டி சார்பில் வடக்கு தாசில்தார் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டோம். பட்டா நிலத்தில் மணல் அள்ளப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறிய அவர் முறைகேடுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு முடித்துக்கொண்டார்.
இதனிடையே சையதை தொடர்பு கொண்ட சில நபர்கள், இந்த பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் எனவும் விலகி இருக்குமாறும் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இயற்கையை காக்க முயற்சித்து வருவதாக கூறும் இவர்கள் எப்படி இப்படியெல்லாம் நடந்து கொள்ள முடிகிறது, என தனது வருத்தத்தை சையத் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
செங்கல் சூளைகளுக்காக மணல் அள்ளுவதை முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அரசு கடந்த சில நாட்களாக எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக செங்கல் சூளை அதிபர்கள் மணல் அள்ளுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க சத்தமில்லாமல் சட்டவிரோதமாக மருதமலை அடிவார பகுதிகளில் செங்கற்களுக்கான செம்மண் அள்ளும் பணிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
ஓசை தன்னார்வ அமைப்பை சேர்ந்த சையத் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இன்று மாலை (04.10.2019) மருதமலை அருகே உள்ள சின்னமலை அடிவாரத்தின் தம்புராயன் துறை பகுதியில் புதரில் மறைந்து நின்றிருந்த செம்மண் லாரி ஒன்றை மடக்கிய சையத், அதன் ஓட்டுனரிடம் அனுமதி கடிதங்களை கேட்டுள்ளார்.
முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்த ஓட்டுனரிடம் இருந்த அனுமதி கடிதம் சின்னத்தடாகம் பகுதியில் மணல் அள்ளுவதற்கான உரிமங்கள் என்பதும் அவை கடந்த ஏப்ரல் மாதத்துடன் காலாவதியானதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சையத், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்த போதும், யாரும் அங்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் சிலரின் உதவியுடன் இது தொடர்பாக சையத் விவரங்களை கேட்டறிந்துள்ளார்.

செம்மண் அள்ளி வந்த லாரி அனன்யா செல்டர்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும் ஏ.பி.டபிள்யூ செங்கல் சூளைக்கு மணல் கொண்டு செல்லப்பட இருந்ததும் தெரியவந்துள்ளதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது மேலும் மனித விலங்கு மோதல்களுக்கு வழி வகுக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக விளக்கமறிய சிம்பிளிசிட்டி சார்பில் வடக்கு தாசில்தார் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டோம். பட்டா நிலத்தில் மணல் அள்ளப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறிய அவர் முறைகேடுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு முடித்துக்கொண்டார்.
இதனிடையே சையதை தொடர்பு கொண்ட சில நபர்கள், இந்த பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் எனவும் விலகி இருக்குமாறும் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இயற்கையை காக்க முயற்சித்து வருவதாக கூறும் இவர்கள் எப்படி இப்படியெல்லாம் நடந்து கொள்ள முடிகிறது, என தனது வருத்தத்தை சையத் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.