மருத்துவ தேர்வாணயம் மூலம் பணி ஆணை பெற்ற செவிலயர்களுக்கு சம வேளை மற்றும் ஊதியம் வழங்கிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோவை : மருத்துவ தேர்வாணயம் மூலம் பணி ஆணை பெற்ற செவிலயர்களுக்கு சம வேளை மற்றும் ஊதியம் வழங்கிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்றது.

கோவை : மருத்துவ தேர்வாணயம் மூலம் பணி ஆணை பெற்ற செவிலயர்களுக்கு சம வேளை மற்றும் ஊதியம் வழங்கிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்றது. 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கோவை மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டது.



மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசால் நேரடியாக பணி ஆணை பெற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற மருத்துவ நிலையங்களில் சுமார் 9 ஆயிரம் செவிலியர்கள் ஐந்து ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.



நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஒரே வேலையை செய்யும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு ரூபாய் 14000 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரே பணியை செய்யும் செவிலியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை கலைந்து ஒப்பந்தம் மற்றும் நிரந்தர செவிலியர்களுக்கும் ஒரே மாதிரியான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்று கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாள் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் வேலை நிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை கைவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்ற 8 ஆணையின் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. போராட்டத்தின் மூலமாக வந்த பெருநில வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஒப்பந்த செவிலியர்கள் சமவேலை செய்கிறார்களா என்று சுகாதார செயலாளர் தலைமையிலான குழு ஆராய்ந்து சமவேலை செய்தால், சம உதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.



ஆனால் சம வேலை செய்யும் செவிலியர்களுக்கு சம உதியம் தர தமிழக அரசு மறுத்துவிட்டது. கடந்த 29.09.2019 அன்று எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் வைத்து நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்தின்படி 04.10.2019 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது. 

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மருத்துவ தேர்வாணயம் மூலம் பணி ஆணை பெற்ற செவிலயர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...