தண்ணீரில் காந்தியடிகள் ஓவியம் ; மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய ஓவிய ஆசிரியரின் புதிய முயற்சி

கோவை : காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தண்ணீரில் காந்தியடிகள் ஓவியத்தை வரைந்த ஓவிய ஆசிரியர், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நீரின் மேல் வரையப்பட்ட இந்த ஓவியத்தை பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.


கோவை : காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தண்ணீரில் காந்தியடிகள் ஓவியத்தை வரைந்த ஓவிய ஆசிரியர், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நீரின் மேல் வரையப்பட்ட இந்த ஓவியத்தை பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.



காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அவிநாசி சாலையில் உள்ள ஆர்.கே.ரங்கங்மாள் பள்ளி ஓவிய ஆசிரியர் மூர்த்தி, மாணவர்களிடையே ஓவிய வரைதலை ஊக்குவிக்கவும் வகையில் தண்ணீரில் காந்தியடிகளின் உருவப்படத்தை கோலப்பொடி கொண்டு வரைந்து இருந்தார்.

இதுகுறித்து ஓவிய ஆசிரியர் மூர்த்தி பேசுகையில், தண்ணீரில் ஓவியங்கள் வரையும் போது கவனமாக வரைய வேண்டும் என்றும் அழுத்தம் அதிகமானால் கோலப்பொடி தண்ணீரில் மூழ்கி விடும் என தெரிவித்தார்.



இந்த ஓவியத்தை வரைய ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டதாக கூறிய அவர், பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, கடந்த மாதம் பூக்களால் வரைந்து இருந்ததாக தெரிவித்தார்.



மேலும், அடுத்ததாக காடா துணி கொண்டு காந்தியடிகள் உருவப் படத்தை வரைந்து, அதில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...