கோவை : இலங்கை அகதிகளுக்கு போலி ஆவணம் தயாரித்து கொடுத்த வழக்கில் கோவை கணபதியைச் சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.
கோவை : இலங்கை அகதிகளுக்கு போலி ஆவணம் தயாரித்து கொடுத்த வழக்கில் கோவை கணபதியைச் சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.
இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 119 அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் .இதில், 33,000-க்கும் அதிகமானோர் காவல் நிலையங்களில் அகதிகளாகப் பதிவு செய்துவிட்டு, வெளியிடங்களில் வசித்து வருகின்றனர்.
இப்படியிருக்க கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, போளூவம்பட்டி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அகதிகள் முகாம் உள்ளன. இந்த முகாம்களில் ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர்.
இப்படியிருக்க மதுரை, திருச்சியில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து பாஸ்போட் வாங்கிய நபர்கள் சிலரை கியு பிராஞ்ச் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம் மற்றும் ஏஜென்ஸிகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் கோவை கணபதியைச் சேர்ந்த ரகுபதி என்பவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து 6 பேருக்கு பாஸ்போர்ட் பெற்று கொடுத்து இருப்பது தெரியவந்தது. மேலும், இருவர் அந்த போலி ஆவணத்தில் வெளிநாடு சென்றுள்ளதும் தெரியவந்தது.
இதனையடுத்து கோவையை சேர்ந்த ஏஜென்ட் ரகுபதியை கைது செய்த கியூ பிரிவு போலீசார் இன்று அவரை கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து நீதிபதி திருஞானசம்பந்தம், ரகுபதியை வரும் 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, கியூ பிரிவு போலீசார் ரகுபதியை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 119 அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் .இதில், 33,000-க்கும் அதிகமானோர் காவல் நிலையங்களில் அகதிகளாகப் பதிவு செய்துவிட்டு, வெளியிடங்களில் வசித்து வருகின்றனர்.
இப்படியிருக்க கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, போளூவம்பட்டி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அகதிகள் முகாம் உள்ளன. இந்த முகாம்களில் ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர்.
இப்படியிருக்க மதுரை, திருச்சியில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து பாஸ்போட் வாங்கிய நபர்கள் சிலரை கியு பிராஞ்ச் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம் மற்றும் ஏஜென்ஸிகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் கோவை கணபதியைச் சேர்ந்த ரகுபதி என்பவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து 6 பேருக்கு பாஸ்போர்ட் பெற்று கொடுத்து இருப்பது தெரியவந்தது. மேலும், இருவர் அந்த போலி ஆவணத்தில் வெளிநாடு சென்றுள்ளதும் தெரியவந்தது.
இதனையடுத்து கோவையை சேர்ந்த ஏஜென்ட் ரகுபதியை கைது செய்த கியூ பிரிவு போலீசார் இன்று அவரை கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து நீதிபதி திருஞானசம்பந்தம், ரகுபதியை வரும் 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, கியூ பிரிவு போலீசார் ரகுபதியை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.