கோவை : கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் மற்றும் அதன் பாதகங்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கோவை : கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் மற்றும் அதன் பாதகங்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக பெண்கள் கல்வி அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் பொறுப்பு முனைவர் குணசுந்தரி தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து பேசிய பாரதியார் பல்கலைக் கழக பெண்கள் கல்வி நலன் உதவி பேராசிரியர் மங்கையர்க்கரசி மற்றும் வால்பாறை உதவி காவல் ஆய்வாளர் வீரம்மாள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் போதை பழக்கம் பற்றி பேசினார். மருத்துவர் கார்த்திகேக்ஷ் யோகா பற்றி விவரித்தார்.
கருத்தரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரசு மருத்துவமனை மருத்துவர் மகேஷ் ஆனந்தி பேசுகையில், இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதை தவிர்க்க வேண்டும் எனவும் தன்னுடைய நண்பர்கள் உறவினர்களையும் போதைப்பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டும் என்றும் நாட்டுக்கு நல்ல குடிமகனாகவும் ஆரோக்கியமானவனாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த கருத்தரங்கத்தில் மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக பெண்கள் கல்வி அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் பொறுப்பு முனைவர் குணசுந்தரி தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து பேசிய பாரதியார் பல்கலைக் கழக பெண்கள் கல்வி நலன் உதவி பேராசிரியர் மங்கையர்க்கரசி மற்றும் வால்பாறை உதவி காவல் ஆய்வாளர் வீரம்மாள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் போதை பழக்கம் பற்றி பேசினார். மருத்துவர் கார்த்திகேக்ஷ் யோகா பற்றி விவரித்தார்.
கருத்தரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரசு மருத்துவமனை மருத்துவர் மகேஷ் ஆனந்தி பேசுகையில், இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதை தவிர்க்க வேண்டும் எனவும் தன்னுடைய நண்பர்கள் உறவினர்களையும் போதைப்பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டும் என்றும் நாட்டுக்கு நல்ல குடிமகனாகவும் ஆரோக்கியமானவனாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த கருத்தரங்கத்தில் மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.