திருப்பூரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த முன்னாள் திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ; வீடு, அலுவலகங்களில் கியூ பிரிவு போலீசார் சோதனை

திருப்பூர் : திருப்பூரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த முன்னாள் திமுக வர்த்தக அணி அமைப்பாளர் மற்றும் பெண் உதவியாளர் ஆகியோர்களது வீடுகள் மற்றும் அலுவலகத்தில் கியூ பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.


திருப்பூர் : திருப்பூரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த முன்னாள் திமுக வர்த்தக அணி அமைப்பாளர் மற்றும் பெண் உதவியாளர் ஆகியோர்களது வீடுகள் மற்றும் அலுவலகத்தில் கியூ பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இலங்கையை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் போலி பாஸ்போர்ட் மூலமாக வெளிநாடு செல்ல முயற்சித்த போது சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். அவரை விமான நிலைய கியூ பிரிவு அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர் ஓடக்காடு பகுதியை சேர்ந்த ராஜ்மோகன்குமார்(43) என்பவர் பிரேம்குமாரிடம் ரூ.28 லட்சம் பெற்றுக்கொண்டு போலி பாஸ்போர்ட் பெற உதவி செய்தது தெரியவந்தது. இதையடுத்து பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், தி.மு.க. பிரமுகரான ராஜ்மோகன்குமார், திருப்பூரில் அலுவலகம் அமைத்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இவர் தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக உள்ளார். வெளிநாட்டு நிறுவனங்களின் பனியன் ஆர்டர்களை பெறும் வகையில் பையிங் அலுவலகம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் ஆகியவற்றையும் இவர் நடத்தி வருவதாக தெரிகிறது. இதையடுத்து கடந்த வாரம் சென்னையில் வைத்து ராஜ்மோகன் குமாரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.



இந்நிலையில், இன்று ராஜ்மோகன்குமாரின் வீடு, அலுவலகம் மற்றும் அவரின் பெண் உதவியாளரான திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த பாரதி என்பவரின் வீட்டிலும் கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு.வருகின்றனர். அதே போல், ராஜ்மோகன்குமாருடன் தொடர்பில் இருப்பவர்களின் விவரங்களையும் சேகரித்த கியூ பிரிவு போலீசார், அவர்களை ரகசிய கண்காணிப்பை தொடர்ந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள் உள்பட மேலும் சிலரிடம் விசாரணை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் மூலமாக, போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலை கூண்டோடு கைது செய்ய கியூ பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...