திருப்பூர் : கால்நடைகளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் திட்டத்தோடு இலவச அவசர எண்ணும் அறிவிக்கப்படும் என்றும் அதன் மூலம் கால்நடைகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூர் : கால்நடைகளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் திட்டத்தோடு இலவச அவசர எண்ணும் அறிவிக்கப்படும் என்றும் அதன் மூலம் கால்நடைகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூரில் சமூகநலத்துறை சார்பில் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்மாவின் அரசு எல்லா நலத்திட்டங்களும் மக்களை சென்றடைய முழுவீச்சுடன் செயலாற்றி வருவதாகவும் அதேபோல், கால்நடைத் துறையில் அனைத்து திட்டங்களும் பயனாளிகளை சென்றடைவதைக் கண்காணித்து வருவதாகவும், கூடிய விரைவில் துவக்கப்பட உள்ள அம்மா ஆம்புலன்ஸ் திட்டத்தோடு 1962 என்ற இலவச அழைப்பு என்னும் அறிவிக்கப்பட உள்ளது.
அதன் மூலம் விவசாயிகள் எப்போது அழைத்தாலும் அவர்கள் இடத்திற்கே சென்று கால்நடைகளுக்கான சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.