மேட்டுப்பாளையம் நகராட்சியின் நிர்வாக சீர் கேட்டினை கண்டித்து நமது மேட்டுப்பாளையம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டை கண்டித்து நமது மேட்டுப்பாளையம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் S.பாஷா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டை கண்டித்து நமது மேட்டுப்பாளையம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் S.பாஷா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

ஆர்பாட்டத்தில் நகராட்சி பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்கப்படாததிற்கும் பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக பிரதான சாலைகள் முதல் வார்டு சாலைகள் வரை குண்டும் குழியுமாக பாராமரிப்பின்றி இருப்பதால் விபத்துகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பொது கழிப்பிடங்கள் சரிவர பராமரிக்காமலும் தெருவிளக்குகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது எனவும் குற்றம் சாட்டினார்கள். 

தலைமை நீரோட்ட நிலையத்தில் மின் மோட்டார்கள் பழுது அடைந்துள்ளதால் முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை, கழிவுநீர் சாக்கடைகள் சுத்தம் செய்வதில்லை மற்றும் மேட்டுப்பாளையத்தில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக சுற்றித்திரியும் ஆடு மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பட்டன. 

மேலும், நகராட்சி நிர்வாகம் மேற்கண்ட கோரிக்கைகளுக்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்களை மக்களைத் திரட்டி மிகப் பெரிய போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...