கோவை : மேட்டுப்பாளையத்தின் ஊரக பகுதிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் மழை நீர் சேகரிப்பு நீர் நிலைகளைப் பாதுகாப்பது குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை : மேட்டுப்பாளையத்தின் ஊரக பகுதிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் மழை நீர் சேகரிப்பு நீர் நிலைகளைப் பாதுகாப்பது குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தின் ஊரக பகுதிகளான சிக்கதாசம்பாளையம், ஜடையம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிளில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிராம மக்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்கள் கிராமம் சார்ந்த அடிப்படை பிரச்சனைகளைக் கூட்டத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து கோவை மாவட்டத்தில் தொடர்ந்து சரிவடைந்து வரும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வீடுகளில் கட்டாயம் மழை நீர் சேகரிப்பை ஏற்படுத்துதல், ஜல்சக்தி அபியான் திட்டம் மூலம் மழை நீரினை சேமிப்பதுடன் குளங்களை தூருவாரி அதனை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எதிர் வரும் வடகிழக்கு பருவமழை காலங்களில் கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோய் போன்றவற்றைத் தவிர்க்கக் கால்நடை முகாம் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டினை முற்றிலும் தவிர்ப்பது, சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் திறந்து வெளி மலம் கழிப்பை தவிர்க்கவும், ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் கலைய சத்தான உணவுகளை எடுத்து கொள்ளவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிராம சபையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தின் ஊரக பகுதிகளான சிக்கதாசம்பாளையம், ஜடையம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிளில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிராம மக்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்கள் கிராமம் சார்ந்த அடிப்படை பிரச்சனைகளைக் கூட்டத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து கோவை மாவட்டத்தில் தொடர்ந்து சரிவடைந்து வரும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வீடுகளில் கட்டாயம் மழை நீர் சேகரிப்பை ஏற்படுத்துதல், ஜல்சக்தி அபியான் திட்டம் மூலம் மழை நீரினை சேமிப்பதுடன் குளங்களை தூருவாரி அதனை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எதிர் வரும் வடகிழக்கு பருவமழை காலங்களில் கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோய் போன்றவற்றைத் தவிர்க்கக் கால்நடை முகாம் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டினை முற்றிலும் தவிர்ப்பது, சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் திறந்து வெளி மலம் கழிப்பை தவிர்க்கவும், ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் கலைய சத்தான உணவுகளை எடுத்து கொள்ளவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிராம சபையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.