கோவை : கோவை தடாகம் அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற ஜோஷ்வா மீது செங்கல் சூளை ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவை தடாகம் அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற ஜோஷ்வா மீது செங்கல் சூளை ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தடாகம் பகுதியில் பல வருடங்களாகச் செங்கல் சூளைக்குச் செம்மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகிறது என்றும் வனவிலங்குகளுக்குத் தொந்தரவு ஏற்படுகிறது என்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.
இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த சமூக ஆர்வலர் ஜோஸ்வா, ஊடகங்கள் வாயிலாகவும் அதிகாரிகளிடமும் தொடர்ச்சியாகப் புகார் அளித்து வந்தார்.
இந்த நிலையில், தடாகம் அருகே உள்ள வீரபாண்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஜோஸ்வா பங்கேற்க செங்கல் சூலை உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் ஜோஸ்வாவை அங்கு வந்திருந்த சிலர் தாக்கினர்.
இதையடுத்து தடாகம் காவல் துறையினர், சமூக ஆர்வலர் ஜோஸ்வாவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.