நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை அருகே நெடுங்கல் கொம்பை பழங்குடியினர் கிராமத்தில் காந்தி ஜெயந்தி தினமான இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை அருகே நெடுங்கல் கொம்பை பழங்குடியினர் கிராமத்தில் காந்தி ஜெயந்தி தினமான இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

200க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராம மக்கள் பங்கேற்ற இந்த கிராம சபை கூட்டத்தில், அப்பகுதியில் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள், மகளிர்க்கான சுயதொழில் செய்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தும் வகையில் அவர்களின் குறைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
மேலும், தூய்மை சுகாதாரத்தை மேற்கொள்ளும் வகையில் கிராமத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் தற்பொழுது ஊட்டச்சத்து குறைவில்லா மாவட்டமாக திகழ மாவட்ட நிர்வாகமானது பல்வேறு செயல்பாடுகளை செய்துள்ளதாக கூறினார்.

இந்த கிராம சபைக் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அடிப்படைத்தேவைகள் வேண்டி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

200க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராம மக்கள் பங்கேற்ற இந்த கிராம சபை கூட்டத்தில், அப்பகுதியில் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள், மகளிர்க்கான சுயதொழில் செய்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தும் வகையில் அவர்களின் குறைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
மேலும், தூய்மை சுகாதாரத்தை மேற்கொள்ளும் வகையில் கிராமத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் தற்பொழுது ஊட்டச்சத்து குறைவில்லா மாவட்டமாக திகழ மாவட்ட நிர்வாகமானது பல்வேறு செயல்பாடுகளை செய்துள்ளதாக கூறினார்.

இந்த கிராம சபைக் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அடிப்படைத்தேவைகள் வேண்டி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.