கோவை : கீழடி நாகரீகம் தொடர்பாக மேலே இருப்பவர்கள் சொல்வதை, அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் சொல்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு விமர்சித்துள்ளார்.
கோவை : கீழடி நாகரீகம் தொடர்பாக மேலே இருப்பவர்கள் சொல்வதை, அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் சொல்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு விமர்சித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தைக் குறைத்து வருவதாகவும் அதன் ஒரு பகுதியாகவே நீதிபதி பதவி உள்ளிட்ட துறைகளில் பிற மாநிலத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு வாய்ப்புகள் குறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கீழடி நாகரீகம் பாரத நாகரீகம் என்ற அமைச்சர் பாண்டியராஜனின் கருத்தை விமர்சித்த அவர், அமைச்சருக்கு மேல் உள்ளவர்கள் சொல்வதை அவரும் சொல்வதாகவும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம் என்பது தொல்லியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறினார்.
ஹட்ரோகார்பன் எடுக்க அனுமதியளிப்பதால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் பாழாகும் என்பதாலேயே அதனைக் கைவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
திமுகவினரிடம் 15 கோடி ரூபாயை கம்யூனிஸ்ட்டுகள் வாங்கியதாக தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நன்கொடையாக வாங்கியது வழக்கமான செயல்பாடு தான் எனவும் முறையான கணக்குகள் காட்டப்பட்டுள்ளதால் அதில் தவறில்லை எனவும் தெரிவித்தார்.
காந்தி ஜெயந்தியில் மதச்சார்பின்மை, அமைதி உள்ளிட்டவற்றைப் பரப்புவதற்கு மாறாக மத்திய அரசு சுத்தம் தொடர்பாக மட்டும் பேசுவதாக கூறிய அவர், காந்தியின் கருத்துக்களை முழுமையாக பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தைக் குறைத்து வருவதாகவும் அதன் ஒரு பகுதியாகவே நீதிபதி பதவி உள்ளிட்ட துறைகளில் பிற மாநிலத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு வாய்ப்புகள் குறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கீழடி நாகரீகம் பாரத நாகரீகம் என்ற அமைச்சர் பாண்டியராஜனின் கருத்தை விமர்சித்த அவர், அமைச்சருக்கு மேல் உள்ளவர்கள் சொல்வதை அவரும் சொல்வதாகவும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம் என்பது தொல்லியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறினார்.
ஹட்ரோகார்பன் எடுக்க அனுமதியளிப்பதால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் பாழாகும் என்பதாலேயே அதனைக் கைவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
திமுகவினரிடம் 15 கோடி ரூபாயை கம்யூனிஸ்ட்டுகள் வாங்கியதாக தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நன்கொடையாக வாங்கியது வழக்கமான செயல்பாடு தான் எனவும் முறையான கணக்குகள் காட்டப்பட்டுள்ளதால் அதில் தவறில்லை எனவும் தெரிவித்தார்.
காந்தி ஜெயந்தியில் மதச்சார்பின்மை, அமைதி உள்ளிட்டவற்றைப் பரப்புவதற்கு மாறாக மத்திய அரசு சுத்தம் தொடர்பாக மட்டும் பேசுவதாக கூறிய அவர், காந்தியின் கருத்துக்களை முழுமையாக பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.