கோவை : மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளை முன்னிட்டு தனியார் அறக்கட்டளை சார்பில் 15 அடி அகலம், 9 அடி நீளம் கொண்ட ராட்சத ராட்டை மற்றும் அரிய வகை புகைப்படங்களைப் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
கோவை : மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு தனியார் அறக்கட்டளை சார்பில் 15 அடி அகலம், 9 அடி நீளம் கொண்ட ராட்சத ராட்டை மற்றும் அரிய வகை புகைப்படங்களைப் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை ஜெய்ஹிந்த் பவுண்டேஷன், நடராஜன் ஸ்ரீ சரோஜினி அறக்கட்டளை இணைந்து நடத்திய காந்தி ஜெயந்தி விழா கோவை பந்தயச் சாலையில் நடைபெற்றது.

இதில் 15 அடி அகலம், 9 அடி நீளம் கொண்ட ராட்சத ராட்டை மற்றும் அரிய வகை புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் மகாத்மா காந்தியடிகளின் மிக பிரமாண்டமான 16 அடி உயரமும் 16 அடி அகலமும் கொண்ட ஆயில் பைண்ட்டிங் வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த அரிய வகை புகைப்படங்களைப் பார்வையிட்டார். பொதுமக்களும் இதனை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் தவத்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார், வழக்கறிஞர் நந்தகுமார், Rev. Fr. சாமுவேல் சார்லஸ் CSI டையசிஸ் கோவை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.