கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் தேசதந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு வால்பாறை பகுதியைத் தூய்மையான பகுதியாக வைத்திருக்க வலியுறுத்தி நெகிழி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் தேசதந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு வால்பாறை பகுதியைத் தூய்மையான பகுதியாக வைத்திருக்க வலியுறுத்தி நெகிழி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் புறப்பட்ட இந்த பேரணியை வால்பாறை நகராட்சி ஆணையர் சரவணபாபு மற்றும் மேற்பார்வையாளர் சிவகுமார் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.
இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மரம் நடுவோம், இயற்கையை பாதுகாப்போம். சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருப்போம் என்ற பதாகைகளைக் கையில் ஏந்தியபடியும் கோஷமிட்டபடி வந்தனர்.
விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரியில் புறப்பட்டு காந்தி சிலை வளாகம், பழைய பேருந்து நிலையம், தபால் நிலையம், காவல்நிலையம் வழியாக கல்லூரி வந்து முடிவுற்றது, ஊர்வலத்தில் வால்பாறை அரசு கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள், தேசீய மாணவர் படை பசுமை பாதுகாப்புப் படை, மற்றும் நகராட்சி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் புறப்பட்ட இந்த பேரணியை வால்பாறை நகராட்சி ஆணையர் சரவணபாபு மற்றும் மேற்பார்வையாளர் சிவகுமார் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.
இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மரம் நடுவோம், இயற்கையை பாதுகாப்போம். சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருப்போம் என்ற பதாகைகளைக் கையில் ஏந்தியபடியும் கோஷமிட்டபடி வந்தனர்.
விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரியில் புறப்பட்டு காந்தி சிலை வளாகம், பழைய பேருந்து நிலையம், தபால் நிலையம், காவல்நிலையம் வழியாக கல்லூரி வந்து முடிவுற்றது, ஊர்வலத்தில் வால்பாறை அரசு கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள், தேசீய மாணவர் படை பசுமை பாதுகாப்புப் படை, மற்றும் நகராட்சி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்