கோவையில் மது போதையில் காரை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியவருக்கு பொதுமக்கள் தர்ம அடி

கோவை : கோவை சரவணம்பட்டி அருகே மதுபோதையில் சொகுசு காரை இயக்கி வந்த நபர் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து விபத்து ஏற்படுத்தியதில் மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை : கோவை சரவணம்பட்டி அருகே மதுபோதையில் சொகுசு காரை இயக்கி வந்த நபர் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து விபத்து ஏற்படுத்தியதில் மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இருசக்கர வாகனங்களின் மீது வாகன சோதனையில் அக்கறை செலுத்தும் போலீசார், கார்களின் மீதோ பேருந்து அல்லது லாரியின் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை.

இதனால் மதுபோதையில் கார், பேருந்து ஆகியவற்றை ஓட்டி செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ப்ரோசோன் மால் அருகே சதீஸ் மற்றும் அனுசியா தம்பதியினர் காரில் அதிவேகமாக வந்துள்ளனர்.



மதுபோதையில் வாகனத்தை இயக்கி வந்த சதீஷ், கட்டுப்பாட்டை இழந்து எதிர்புறத்தில் வாகனத்தை இயக்கி வந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் மீது மோதினார்.

இதனைத்தொடர்ந்து ராமகிருஸ்னாபுரம் -சரவணம்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீதும் அதிவேகமாக மோதினார். இதில் விபத்துக்குள்ளான மூன்றுபேரும்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, அங்கு கூடியிருந்த பொதுமக்கள், மதுபோதையில் அதிவேகமாக வாகனத்தை இயக்கி வந்த சதீஷை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த சரவணம்பட்டி போலீசார், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...