கோவை : கோவை ராஜவீதியில் செயல்பட்டு வரும் சுமங்கலி ஜுவல்லரியில் இன்று அதிகாலை சுமார் பனிரெண்டு முப்பது மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்ப்பட்டது.
கோவை : கோவை ராஜவீதியில் செயல்பட்டு வரும் சுமங்கலி ஜுவல்லரியில் இன்று அதிகாலை சுமார் பனிரெண்டு முப்பது மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்ப்பட்டது.

இன்று அதிகாலை சுமார் பனிரெண்டு முப்பது மணி அளவில் அந்த கடையில் இருந்து புகை மூட்டம் கிளம்பியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதற்குள் மளமளென்று கடையில் தீ பரவியது. பின்னர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்காக தீயணைப்பு துறையினர் 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.