வங்கி இயங்கும் நேரங்களில் அதிரடி மாற்றம்...! இன்று முதல் அமலுக்கு வந்தது

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தங்களது வசதிக்கேற்ப, வங்கி பணி நேரங்களில் செயல்பட்டு வந்த நிலையில், ஒருங்கிணைந்த பணி நேரமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தங்களது வசதிக்கேற்ப, வங்கி பணி நேரங்களில் செயல்பட்டு வந்த நிலையில், ஒருங்கிணைந்த பணி நேரமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல பொதுத்துறை வங்கிகள் சமீபத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள நிலையில், நிதிச்சேவை துறை வங்கிகள் இயங்கும் நேரத்தையும் தற்போது அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக்கி உள்ளது.

இன்று அமலாகியுள்ள புதிய நேர முறையின் அடிப்படையில், காலை 10 மணிக்கு தொடங்கும் வங்கிகள் சேவை, மாலை 4.00 மணியுடன் முடிவடைகிறது. பிற்பகல், 2.00 மணி முதல் 2.30 மணி வரை உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.

எனினும், மிசோரம், நாகாலாந்து, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொதுவான நேர முறையில் மாற்றம் இருக்கிறது. பொதுவாக வடகிழக்கு மாநிலங்களில் நாட்டின் மற்ற பகுதிகளை விட முன்னரே சூரியன் உதயமாகும் என்பதால், மிசோரம், நாகாலாந்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வங்கிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வங்கிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கிம், அந்தமான், டையு-டாமன், தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய பகுதிகளுக்கு இன்னும் பொதுவான நேரம் நிர்ணயிக்கப்படவில்லை.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...