மேட்டுப்பாளையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ; 45 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த சொந்தங்கள்

கோவை : மேட்டுப்பாளையத்தில் உள்ள மகாஜன அரசுப்பள்ளியில் 1973ல் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது நண்பர்களைப் பார்த்து ஒருவருக்கொருவர் கட்டி அனைத்து கொண்டனர்.

கோவை : மேட்டுப்பாளையத்தில் உள்ள மகாஜன அரசுப்பள்ளியில் 1973ல் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது நண்பர்களைப் பார்த்து ஒருவருக்கொருவர் கட்டி அனைத்து கொண்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 1919ம் ஆண்டு முதல் அரசு உதவிபெறும் மகாஜன மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்கு முன்பு இருந்து எண்ணற்ற மாணவர்களை உருவாக்கி வரும் இந்த பள்ளியில், கடந்த 1973- 74 ஆண்டுகளில் இங்கு கல்வி பயின்ற, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.



கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாகப் படித்த மாணவ மாணவிகள் என்று ஒன்றிணைந்து சந்தித்து தங்களது பள்ளி கால மலரும் நிகழ்ச்சிகளைப் பேசி நெகிழ்ந்தனர். மேலும், ஒருவரை ஒருவர் கட்டி தழுவி கண்களில் கண்ணீர் தழும்ப தங்கள் அன்பினை வெளிப்படுத்தினர். இதனையடுத்து, தங்களுக்குக் கல்வி போதித்து சிறந்த மனிதர்களாக உருவாக்கி ஆசானாகிய ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவப்படுத்தினர். மேலும், தற்போது இதே பள்ளியில் கல்வி பயிலும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவனுக்கு உதவித்தொகையும் வழங்கினர். 



இந்த நிகழ்ச்சியில் 180க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...