சாலை விதிகளை மதிக்க கோரும் மாணவர்கள்; உயிர் அமைப்பின் திட்டத்திற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு

கோவை : கோவையில் விபத்தில்லா சாலைகளை உருவாக்கும் பொருட்டு போக்குவரத்து சந்திப்புகளில் மாணவர்கள் சாலை விதிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி வாகன ஓட்டிகளை அறிவுறுத்தி வருகின்றனர்.


கோவை : கோவையில் விபத்தில்லா சாலைகளை உருவாக்கும் பொருட்டு போக்குவரத்து சந்திப்புகளில் மாணவர்கள் சாலை விதிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி வாகன ஓட்டிகளை அறிவுறுத்தி வருகின்றனர்.

உயிர் அமைப்பு சார்பில் 16 கல்லூரிகளில் உயிர் கிளப்புகள் எனப்படும் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்ள மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள், ஹெல்மெட் அணிந்து வருவதையும், கார்களில் சீட் பெல்ட் அணிந்து வருவதையும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதனை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து சந்திப்புகளில் பதாகைகளை தாங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று கோவையில் துவங்கப்பட்டது. 



கோவை அண்ணா சிலை சந்திப்பில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர், சுமித் சரண் மற்றும் உயிர் அமைப்பின் மேலாண்மை அறங்காவலர் மருத்துவர் எஸ். ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியின் போது சாலை விதிகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சந்திப்புகளில் நிற்கும் வாகன ஓட்டிகளிடம் மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

மேலும் சீட்பெல்ட், ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு அவர்கள் இனிப்புகளையும் வழங்கினர்.



இது குறித்து பேசிய மருத்துவர் ராஜசேகரன், இந்த செயல்பாடுகள் வாகன ஓட்டிகளிடம் பெரும் மாற்றத்தை உருவாக்கி உள்ளதாகவும் விபத்தில்லா சாலைகளை உருவாக்க மாணவர்களுடன் இணைந்த இந்த முயற்சி நிச்சயம் பலனளிக்கும் எனவும் கூறினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...