அடிப்படை தேவைகளை செய்து தர கோரி 200க்கும் மேற்பட்டோர் நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

நீலகிரி : நீலகிரி மாவட்டம் தூதூர்மட்டம் பகுதியில் அடிப்படைத் தேவைகளை செய்து தர கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த 200க்கும் மேற்பட்டோர், ஆட்சியரை நேரில் சந்திக்க வேண்டும் என தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் தூதூர்மட்டம் பகுதியில் அடிப்படைத் தேவைகளை செய்து தர கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த 200க்கும் மேற்பட்டோர், ஆட்சியரை நேரில் சந்திக்க வேண்டும் என தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் தூதூர்மட்டம் பகுதியில் அடிப்படைத் தேவைகளை செய்து தர கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க 200க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, தங்களுக்கான தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தே ஆக வேண்டும் என தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.



தூதூர் மட்டம் மகாலிங்க காலணியில் குடிநீர், கழிப்பிட வசதி, மயான பூமி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அமைத்துத் தர மாவட்ட ஆட்சியரை சந்திக்க கை குழந்தைகளுடன் வந்த பொதுமக்கள், திடீரென கை குழந்தைகளை தரையில் படுக்க வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்டவற்றை ஒப்படைக்க முயன்றனர். இதனைத் தடுக்க முயன்ற காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் இன்று அப்பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் கூறியதையடுத்து, 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...